Home இந்தியா அனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை

அனைத்துலக யோகா தினம்- மோடி மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரை

494
0
SHARE
Ad

புது டில்லி: அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றியுள்ளார்.

7- வது அனைத்துலக யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜூன் 21- ஆம் தேதியை அனைத்துலக யோகா தினமாக 2015- ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அறிவித்தது.

#TamilSchoolmychoice

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்; வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற திருக்குறளை மேற்கோள் காட்டி எந்த ஒரு நோயாக இருந்தாலும் முதலில் அந்த நோய்க்கான காரணத்தை கண்டறிந்து பின்னர் மருத்துவம் அளிக்க வேண்டும்,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.