Home நாடு கொவிட்-19: மரணங்கள் 103 – புதிய தொற்றுகள் 7,643! மூவர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்!

கொவிட்-19: மரணங்கள் 103 – புதிய தொற்றுகள் 7,643! மூவர் 30 வயதுக்கும் குறைவானவர்கள்!

1619
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 6 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 103 மரணங்கள் பதிவாயின. நேற்று திங்கட்கிழமை ஒரு நாளில் இந்த எண்ணிக்கை 77 ஆக இருந்தன. ஒருநாளில் மரண எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தன.

இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5,677 ஆக உயர்ந்தது.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 67 பேர், பெண்கள் 33 பேர்.  மரணமடைந்தவர்களில் 12 பேர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இவ்வாறு நாள்தோறும் மரணமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்படும் கொவிட் தொற்று கண்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மரணமடைந்தவர்களில் மூவர் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவர்களில் 67 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 33 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.

ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 7,654

ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் கூடுதலாக நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில் இன்று 7 ஆயிரத்தைக் கடந்தது.

இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 6 வரையிலான ஒருநாளில் பதிவான மொத்த தொற்றுகள் 7,654 ஆகும்.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 792,693 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 7,654 தொற்று சம்பவங்களில் 7,643 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 11 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 4,797-ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 714,815 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 72,201 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று இதே எண்ணிக்கை 69,447 என பதிவாகியிருந்தது. ஒரே நாளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,754 ஆக உயர்ந்திருக்கிறது.

இவர்களில் 943 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 450 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 792,693 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரை சிலாங்கூர் 3,260 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாகத் தொடர்ந்து பதிவாகியிருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 1,550 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 698 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் பிடித்திருக்கிறது.

சரவாக் 286 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

ஒருநாளில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இதற்கிடையில் நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை ஜூலை 5-ஆம் தேதி நள்ளிரவு வரையில் ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்டன.

சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு வரையிலான ஒருநாளில் மட்டும் மொத்தம் 313,761 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இதில் 196,603 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் முதல் தடவையாகப் போடப்பட்டிருக்கின்றன.

எஞ்சிய 117,158 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டன.