Home நாடு ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

485
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை ஜூலை 5-ஆம் தேதி நள்ளிரவு வரையில் ஒருநாளில் 300,000-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்டன.

சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு வரையிலான ஒருநாளில் மட்டும் மொத்தம் 313,761 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதில் 196,603 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் முதல் தடவையாகப் போடப்பட்டிருக்கின்றன.

எஞ்சிய 117,158 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டன.

மலேசியாவுக்கு அமெரிக்காவும், ஜப்பானும் தடுப்பூசிகளை வழங்கி உதவியிருக்கின்றன.

உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.

ஜப்பான் அஸ்ட்ரா ஜெனிகா இரக தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.