Home இந்தியா ஆர்.என்.ரவி : தமிழ் நாடு புதிய ஆளுநராக நியமனம்

ஆர்.என்.ரவி : தமிழ் நாடு புதிய ஆளுநராக நியமனம்

543
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் புதிய ஆளுநரான 69 வயதான ஆர்.என்.ரவியை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) முதல் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரவி, 1952-இல் பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் பிறந்தார். 1976-இல் கேரளா மாநிலத்தின் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎஸ் என்பது காவல் துறையில் உயர்நிலை அதிகாரிகளுக்கான தேர்வுக் களமாகும்.

#TamilSchoolmychoice

உளவுத்துறையில் சிறப்பு இயக்குனர் உட்பட பல பொறுப்புகளை வகித்த அவர் 2012-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

2014 முதல் ஒருங்கிணைந்த உளவுத்துறை தலைவராக இருந்தார். 2018-இல் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

2019-இல் நாகலாந்து ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டார்.

இதுவரையில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், இனி பஞ்சாப், சண்டிகர் ஆளுநராகப் பதவி வகிப்பார்.

ஸ்டாலின் வாழ்த்து

இதற்கிடையில் தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

“தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என தனது முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal