Home நாடு வருமானவரி இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரி பதவி நீக்கம்

வருமானவரி இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரி பதவி நீக்கம்

519
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வருமானவரி இலாகாவின் தலைமைச் செயல் அதிகாரி சாபின் சாமிதா இன்று செவ்வாய்க்கிழமை அக்டோபர் 19 முதல் அரசாங்கத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

நஜிப் துன் ரசாக் பிரதமராக இருந்தபோது சாபின் சாமிதா அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

ஆனால் அண்மையில் அதிகார விதிமீறல்களைப் புரிந்ததாக சாபின் சாமிதா மீது நஜிப் குற்றம் சுமத்தியிருந்தார்.

#TamilSchoolmychoice

நஜிப் சாபின் சாமிதா மீது காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சாபின் சாமிதா தனக்கு விருப்பமான மற்ற துறைகளில் ஈடுபடும் வண்ணம் அவரின் ஒப்பந்தத்தை அரசாங்கம் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நஜிப் துன் ரசாக் 1.7 பில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும் என்ற வழக்கு ஒன்றும் அவர் மீது வருமான வரி இலாகா தொடுத்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal