Home உலகம் வட கொரியா, ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

வட கொரியா, ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை

558
0
SHARE
Ad
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்

பியோங்யாங் : ஏவுகணைப் பரிசோதனைகள் நடத்தி அடிக்கடி ஜப்பானையும், தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டி வரும் வட கொரியா, மீண்டும் இன்று மற்றொரு ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியிருக்கிறது.

இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை வடகொரியா செலுத்தியிருக்கிறது.