Home நாடு சனுசி முகமட் நூர் தேசநிந்தனை வழக்கு : கெடாவில் அனுதாபம் பெருகுமா?

சனுசி முகமட் நூர் தேசநிந்தனை வழக்கு : கெடாவில் அனுதாபம் பெருகுமா?

304
0
SHARE
Ad
முகமட் சனுசி முகமட் நோர்

ஷா ஆலாம் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்ட அவர் அடுத்த 5 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் சூழலில் கெடா மந்திரி பெசார் சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் கெடாவும் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் சார்பில் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் சனுசி தொடர்ந்து பேசி வருகிறார்.

சிலாங்கூர் சுல்தானையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை புகார்கள் செய்யப்பட்டன. விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

கெடா சட்டமன்றத் தேர்தலில் சனுசி நூர் கைது காரணத்தினால் வாக்காளர்களிடையே அனுதாபம் பெருகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், சுல்தான் ஒருவரை அவமதித்ததால் நடுநிலை மலாய் வாக்காளர்களிடையே சனுசிக்கும் பாஸ் கட்சிக்கும் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்ப்பலைகள் கிளம்பும் என்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.