Home நாடு ‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை

‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை

226
0
SHARE
Ad

சைபர் ஜெயா : இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்கு மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.

“இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றதில் மகிழ்ச்சி. தமிழ் மொழியும், அதன் சிறப்பும் சொல்லித் தெரிவதில்லை. இது உணவுக்கான மொழியல்ல. உணர்வுக்கான மொழி. வாழ்க்கை நெறியைச் சொல்லும் அற்புதமான மொழி. தமிழ் அமுது இலக்கிய நிகழ்ச்சியும், விருதளிப்பு விழாவும் என காலையிலேயே இலக்கியம் பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி” என சரவணன் தனதுரையில் குறிப்பிட்டார்.