Home நாடு மஇகா ஜோகூர் மாநிலப் பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்

மஇகா ஜோகூர் மாநிலப் பொருளாளர் டத்தோ கண்ணன் காலமானார்

209
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மஇகாவில் தொகுதித் தலைவராகவும், மாநிலப் பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கும் டத்தோ எஸ்.கண்ணன் சுப்பையா இன்று வெள்ளிக்கிழமை (மே 17) காலமானார்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினராகும் அவர் சேவையாற்றியிருக்கிறார். மஇகா ஜோகூர் மாநிலத்தின் நடப்பு பொருளாளராகவும் கண்ணன் பதவி வகித்து வந்தார்.

அவரின் மறைவுக்கு மஇகா தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அவரின் மறைவு குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன், தனது அரசியல் பயணத்தில் கண்ணன் வழங்கிய வழிகாட்டுதலையும், ஆதரவையும் என்றும் நினைவு கூருவேன் எனத் தெரிவித்தார். கண்ணனின் மறைவு தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் மோகன் குறிப்பிட்டார்.