Home இந்தியா திமுகவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!

திமுகவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!

99
0
SHARE
Ad
கு.அண்ணாமலை

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் கு.அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளார். அவர் வெளியிட்ட காணொலியில் இந்த விவகாரம் தொடர்பான தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கோட்டூர் சண்முகம் என்ற திமுக பிரமுகரும் தமிழ் நாடு சுகாதார அமைச்சர் மா.சண்முகமும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்த அண்ணாமலை இதற்கெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது திமுகவினர் அடுத்த 48 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும், இல்லையெனில் தான் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் எச்சரித்தார்.

கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஞானசேகரன் செய்த முதல் தொலைபேசி அழைப்பு ஒரு காவல் அதிகாரிக்கு எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, தனக்கு தகுந்த பதில் கிடைக்காவிட்டால் அந்த காவல் துறை அதிகாரியின் பெயரை வெளியிடப் போவதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

டிசம்பர் 24-ஆம் தேதி (2024) திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார்” எனக் குறிப்பிட்ட அண்ணாமலை “யாரைக் காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்?” எனவும் கேள்வி எழுப்பினார்.

இவர்களையெல்லாம் விசாரிக்காமல் ஞானசேகரன் தனியாக செயல்பட்டார் என அவசரம் அவசரமாக வழக்கை முடித்திருக்கிறார்கள் எனவும் தனது காணொலியில் அண்ணாமலை கூறினார்.

எனினும் இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மா.சுப்பிரமணியத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “தினமும் என்னை எத்தனையோ பேர், வட்டச் செயலாளர்கள் அழைக்கிறார்கள், நான் ஒரு மாவட்டச் செயலாளர் என்பதால்! எனவே அண்ணாமலை கூறும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் பதில் கூறவேண்டியதில்லை” என இந்த விவகாரத்தைக் கடந்து சென்றிருக்கிறார்.