Home கலை உலகம் குத்துப் பாடலா? ஆட மறுப்பு தெரிவித்த நயன்தாரா

குத்துப் பாடலா? ஆட மறுப்பு தெரிவித்த நயன்தாரா

684
0
SHARE
Ad

indexசென்னை,ஜன.30- ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆட மறுப்பு தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. ஷாருக்கான் –  தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் உருவாகி வரும் திரைப்படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’.

ரோகித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில் குத்துப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு நயன்தாரா ஆடினால் பொருத்தமானதாக இருக்கும் என இயக்குனர் எண்ணியிருக்கிறார். இதற்காக சம்பளமாக பெருந்தொகை பேசப்பட்டுள்ளது.

ஆனால் நயன்தாரா குத்துப்பாடலுக்கு ஆட மறுப்பு சொல்லியிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் மறுத்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெவிக்கின்றன.

#TamilSchoolmychoice

மும்பையில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரம் செல்லும் இரயிலில் நாயகன் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்களே ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதை.