Home உலகம் இத்தாலியில் கப்பல் மோதி துறைமுக ஊழியர்கள் மூவர் பலி

இத்தாலியில் கப்பல் மோதி துறைமுக ஊழியர்கள் மூவர் பலி

390
0
SHARE
Ad

indexஇத்தாலி, மே 8- இத்தாலியில், கார்கோ கப்பல் ஒன்று, துறைமுகப் பகுதியில் வேகமாக வந்து கட்டுப்பாட்டு அறை மீது மோதியதில், 3 ஊழியர்கள் பலியானார்கள்.

ஜெனிவோ துறைமுகத்தில் இன்று காலை நேரிட்ட இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துறைமுகப் பகுதியில் நிறுத்துவதற்காக வந்த கப்பல், கட்டுப்பாட்டை இழந்து துறைமுகப் பகுதியில் வேகமாக வந்து கட்டுப்பாட்டு அறை மீது மோதியதில், இரண்டு துறைமுக அதிகாரிகள் மற்றும் ஒரு மாலுமி ஆகிய மூவர் உயிரிழந்ததாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.