Home கலை உலகம் பிரபல இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்

பிரபல இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்

592
0
SHARE
Ad

images (3)சென்னை, ஜூன் 15 – பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற படத்தை இயக்கினார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, வில்லன், அப்பா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சினிமா மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் இருந்தவர் பின்பு டைரக்டர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த மணிவண்ணனுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மணிவண்ணனுக்கு ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர்.

மறைந்த மணிவண்ணனின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனின் மறைவுக்கு திரைநட்சத்திங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.