Home இந்தியா ஏழைகளுக்கு ரூ.3 லட்சம் மருத்துவம்–கல்வி உதவி: கருணாநிதி வழங்கினார்

ஏழைகளுக்கு ரூ.3 லட்சம் மருத்துவம்–கல்வி உதவி: கருணாநிதி வழங்கினார்

558
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 12– தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:–

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

karuna_1375724fவைப்பு நிதியாக போடப்பட்ட 5 கோடி ரூபாயில் தென் இந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.2 கோடியே 81 லட்சத்து 45 ஆயிரம். மேலும் 2013 ஜூன் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 16 பேருக்கு தலா ரூபாய் 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் 12.7.2013 (இன்று) வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.