இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தடை உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் படத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் அமைப்புகளுடன் கமல்ஹாசன் பேச வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். இதையடுத்து முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. படத்தில் 7 காட்சிகளும் சில வசனங்களின் ஒலியை நீக்கவும் கமல் ஒப்புக்கொண்டார். சமரசம் ஏற்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு முடிக்கப்பட்டது. இப்போது விஸ்வரூபம் படம் தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான தியேட்டர்களில் நாளை திரைக்கு வருகிறது.
Comments