மேலும், “இது போன்ற இஸ்லாமுக்கு எதிரான நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது சமூகத்தில் போதுமான புரிந்துணர்வு இல்லை என்று தெரிகிறது. இந்து மதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரை இஸ்லாம் மதத்தினர் அவமதிப்பதில்லை.ஆனால் இஸ்லாம் அல்லாதவர்கள் நம்மை அவமதிக்கிறார்கள் ” என்றும் முகைதீன் தெரிவித்துள்ளார்.
அதோடு, “இஸ்லாமை அவமதிப்பது போல் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுபவர்கள் மீது மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ( Malaysian Communications and Multimedia Commission) மற்றும் உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் முகைதீன் நேற்று புத்ர ஜெயாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கூறியுள்ளார்.