Home நாடு எந்த நேரத்திலும் நாய் பயிற்றுநர் மஸ்னா விடுதலை செய்யப்படலாம் – வழக்கறிஞர் தகவல்

எந்த நேரத்திலும் நாய் பயிற்றுநர் மஸ்னா விடுதலை செய்யப்படலாம் – வழக்கறிஞர் தகவல்

464
0
SHARE
Ad

1-hari-300x175கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – சர்ச்சைக்குரிய ஹரி ராயா வாழ்த்து  காணொளியை வெளியிட்ட நாய் பயிற்றுநர் மஸ்னா முகமட் யூசோப் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் லத்தீபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் லத்தீபா , “மஸ்னா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் விசாரணையை நடத்தும் அதிகாரி கூறினார்” என்று பத்திரிக்கைகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

மஸ்னாவின் கைது ஆணை இன்று மதியத்தோடு தள்ளுபடி ஆவதால், அவரை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தார் செகாமட் காவல்நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் லத்தீபா தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…