Home நாடு 2014 வரவு செலவுத் திட்டம்: ஜிஎஸ்டி சேர்க்கப்படுமா? இல்லையா? – பிரதமர் மௌனம்

2014 வரவு செலவுத் திட்டம்: ஜிஎஸ்டி சேர்க்கப்படுமா? இல்லையா? – பிரதமர் மௌனம்

392
0
SHARE
Ad

najib12கோலாலம்பூர்,ஆகஸ்ட் 29 – இன்னும் இரண்டு மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் பொருள் சேவை வரியை அமல் படுத்துவது குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் மௌனம் காத்து வருகிறார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நஜிப், “ஜிஎஸ்டி என்பது புது விஷயமல்ல. அதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது வரவு செலவு திட்டத்தில் இருக்குமா? இருக்காதா? என்பதை அறிந்து கொள்ள வரவு செலவுத் திட்டம் வெளியிடப்படும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ள 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், 4 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை, நஜிப் அறிமுகம் செய்வார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆனால் அதை பிரதமர் நஜிப் உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.