Home வாழ் நலம் குளிர்கால சரும பராமரிப்புகள்

குளிர்கால சரும பராமரிப்புகள்

456
0
SHARE
Ad

face

கோலாலம்பூர், டிசம்பர் 4 -குளிர்காலம் தொடங்கும் போது கூடவே தோல் தொடர்பான பிரச்சனைகளும் படையெடுக்கத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்காற்றினால் தோல் வறட்சியடைந்து விடும். தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும்.

குளிர்காலத்தில், சருமத்தின் வறட்சியும் அதிகரித்து காணப்படும். ஏனெனில் குளிர்காலத்தில் மிகவும் குளிர்ச்சியான காற்று வீசுவதால் அவை சருமத்தில் உள்ள ஈரப்பசையை முற்றிலும் உறிஞ்சி வெளியேற்றி சருமத்தை அதிகப்படியான வறட்சிக்கு உள்ளாக்கிவிடும்.

#TamilSchoolmychoice

ஆகவே குளிர்காலத்தில் சருமத்தை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. ஒருவேளை சரியாக பராமரிக்காவிட்டால், சருமத்தில் ஏற்படும் வறட்சி அதிகரித்து ஆங்காங்கு வெடிப்புகள் மற்றும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.

இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், சருமத்தை ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

1. அவகேடோ குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய பழம். ஆகவே அந்த பழத்தை அரைத்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஈரப்பசையானது நீங்காமல் இருக்கும்.

2. பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

3.முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், சருமம் வறட்சியின்றி, மென்மையாகவும், சுருக்கங்களின்றியும் இருக்கும்.

4. வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் பூச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

5. பப்பாளியில் உடல்நல நன்மைகள் மட்டுமின்றி, பல அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதற்கு பப்பாளியை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, 10 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.