Home இந்தியா குஜராத்தின் முக்கிய நகரங்களை அணுகுண்டுகள் வீசி தாக்கத் திட்டம்

குஜராத்தின் முக்கிய நகரங்களை அணுகுண்டுகள் வீசி தாக்கத் திட்டம்

360
0
SHARE
Ad

bomb

குஜராத், டிசம்பர் 30 – குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களை அணுகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்த இந்திய முஜாகிதின் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பாக தேடப்பட்டு வந்த  இந்திய முஜாகிதின் அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் கடந்த ஆகஸ்ட 27-ம் தேதி நேபாளத்தில் இந்திய அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். அதன் பிறகு டெல்லி கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள யாசினிடம் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது பாகிஸ்தானிடமிருந்து செயல்படும் ரியாஸ் பட்கல் என்ற தீவிரவாதி குஜராத் நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தும்படி தமக்கு உத்தரவிட்டதாக அவன் தெரிவித்துள்ளான். அணுகுண்டு உட்பட அனைத்து வகையான வெடிகுண்டுகளையும் பாகிஸ்தானிடமிருந்து தம்மால் இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என்று ரியாஸ் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ள யாசின் பட்கல் ஜவுளி நகரமான சூரத் நகர் மீது தாக்குதல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளான்.

கோத்ரா கலவரத்திற்கு பழிவாங்கவே குஜராத் மாநிலத்தை தாம் தேர்ந்தெடுத்ததாகவும் விசாரணையில் அவன் தெரிவித்துள்ளான். இதற்கான ஏற்பாடுகளில் தாம் இறங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவன் கூறியுள்ளான். மேலும் குஜராத் மாநிலம் மீதான தாக்குதலை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது என்று யாசின் தெரிவித்துள்ளான்.

தீவிரவாதி யாசின் பட்கலின் இந்த வாக்கு மூலத்தை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் படி அந்த மாநில காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கூறியுள்ளனர்.