Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு – ஏப்ரல் 7 முதல் மே 12 வரை...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு – ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது!

511
0
SHARE
Ad

vssampathடெல்லி, மார் 5 – 2014-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் விஞ்ஞான் பவனில்மக்களவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார்.

விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி சம்பத், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆந்திரப் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2-ல் முடிவடைகிறது. சிக்கிம் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது.

வேட்பாளர் செலவை உயர்த்துவது பற்றி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர், தேர்தல் தேதியுடன் பண்டிகை தேதி குறுக்கிடக் கூடாது என கட்சிகள் கோரியதாக குறிப்பிட்டார். மழைக்காலம் துவங்குவது, கடும் கோடைக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

2014 மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்றும் கூறினார்.

முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2 மாநிலங்களில் 6 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.

* 2-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி 5 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 3-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10-மாம் தேதி 14 மாநிலங்களில் 92 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 4-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி 3 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 5-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17-ஆம் தேதி 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 122 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 6-வது கட்ட வாகுப் பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 7-வது கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 30-ஆம் தேதி 9 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 8-வது கட்ட வாக்குப் பதிவு மே 7-ஆம் தேதி 7 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு நடைபெறும்.

* 9-வது கட்ட வாக்குப் பதிவு மே 12-ஆம் தேதி 3 மாநிலங்களில் 41 தொகுதிகளுக்கு நடைபெறும்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் ஏப்ரல் 24-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மார்ச் 29-ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 5-ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் சட்டமன்றத்  தொகுதிக்கு ஏப்ரல் 24-ஆம் தேதியன்றே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.