Home உலகம் துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழர்-தமிழக அரசு உதவுமா?

துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழர்-தமிழக அரசு உதவுமா?

475
0
SHARE
Ad

06-dubai-coma-patient-600-jpgதுபாய், மார்ச் 7 – துபாய் மருத்துவமனையில் கடந்த 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவி செய்யுமாறு துபாய் ஈமான் அமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமாவில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகத்திற்கு அனுப்பி வைக்க அவரது நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அந்நிறுவனம், துபாயில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர்.

அவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இப்பணியில் உதவிட விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 00971 50 467 43 99 / 00971 50 51 96 433 ஆகிய எண்களில் அல்லது info@imandubai.com  என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.