Home இந்தியா மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் பா.ஜ.வில் சேர்ந்தார்!

மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் பா.ஜ.வில் சேர்ந்தார்!

506
0
SHARE
Ad

downloadபுதுடெல்லி, மார்ச் 23 – எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளருமான எம்.ஜே. அக்பர், நேற்று பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார். பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் தொகுதியில் கடந்த 1989 – 1991ல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, நேற்று பா.ஜ.வில் சேர்ந்தார். 1989-ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்கு முன்பாக, அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக அக்பர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.