Home India Elections 2014 தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது – மோடி குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது – மோடி குற்றச்சாட்டு!

444
0
SHARE
Ad

modiடெல்லி, மே 9 – தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, கடந்த மூன்று கட்ட தேர்தல்களின் போது உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நேர்மையாக தேர்தல் நடைபெறவில்லை என குறை கூறினார்.

அம்மாநிலங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி வீனியா பாக்கில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நரேந்திர மோடி, தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி விமர்சித்துள்ளார்.