Home உலகம் ஆப்கன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 செயற்கை கால்கள் – இந்திய நிறுவனம் முடிவு!

ஆப்கன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 செயற்கை கால்கள் – இந்திய நிறுவனம் முடிவு!

823
0
SHARE
Ad

19TH-FEET_1901263fகாபூல், மே 19 – ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஜனநாய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகிவிட்டது. தீவிரவாதிகள் நடத்தும் குண்டுவெடிப்பு சம்பவங்ளினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலர் தங்கள் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். தற்போது அவர்களுக்கு உதவ இந்திய நிறுவனம் முன்வந்துள்ளது.

போரில் கால்களை இழந்தவர்களுக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் செயற்கை கால்களை இலவசமாக வழங்க ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்பூர் ஃபூட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் ஆப்கானிஸ்தான் அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் நாட்டு சமூகநலத்துறை அமைச்சர் ஆமினா அப்சாலி கூறுகையில், “இந்திய நிறுவனம் செயற்கை கால்களை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. குண்டுவெடிப்பில் கால்களை இழந்தவர்களுக்கும், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இது பயனுள்ளதாக இருக்கும். இந்த உதவி இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.