Home இந்தியா நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன முக்கிய 3 அறிவுரைகள்!

நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன முக்கிய 3 அறிவுரைகள்!

518
0
SHARE
Ad

modi-kalamடெல்லி, மே 23 – நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அப்துல் கலாம், அவருக்கு 3 முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடியை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

‘‘உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியை பெற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்’’ என்று அப்போது கூறிய அப்துல் கலாம், புதிதாக அமைய இருக்கும் பாரதீய ஜனதா அரசு எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் பட்டியலிட்டார்.

பின்னர்,10 நிமிடங்களுக்கு மேல் நரேந்திர மோடியிடம் பேசிய அப்துல் கலாம், மோடியிடம் 3 முக்கிய அறிவுரைகளையும் முன் வைத்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செய்தியாக வெளியிட்டு உள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் கூறியிருப்பதாவது, நான், மோடியிடம் இந்த நாட்டை வளர்ந்த நாடாக்க கீழ்க்கண்ட 3 முக்கிய செய்திகளை முன் வைத்தேன்.

1. இந்த நாட்டின் நகர்ப்புறம் மற்றும் 6 லட்சம் கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தடையற்ற தண்ணீர் வழங்க வேண்டும். இது தேசிய நீர்த்தட ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே சாத்தியமாகும். வறட்சி காலத்திலும் தண்ணீர் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரம், வெள்ளக்காலத்தில் தண்ணீரை சரியான வகையில் வினியோகிக்க நீர் மேலாண் நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு குடும்பமும் சம்பாதிக்கும் திறமையை உருவாக்க வேண்டும். குறிப்பாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மற்றும் நடுத்தரவர்க்க குடும்பங்கள் சம்பாதிக்க வகை செய்ய வேண்டும். குறிப்பாக நாட்டின் 200 மில்லியன் (20 கோடி) குடும்பங்களில் 150 மில்லியன் (15 கோடி) குடும்பங்கள் இவ்வாறு உள்ளன. இதற்கு 7 ஆயிரம் புரா கூட்டு திட்டம் மூலம் அறிவு, மின்னணு, உடலுழைப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே இது சாத்தியம்.

3. இந்த நாட்டிற்கு தேவைப்படும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க 64 மில்லியன் (6 கோடியே 40 லட்சம்) இளையோர்க்கு சரியான வேலைவாய்ப்பு ஏற்படுத்த நாம் உழைத்தாக வேண்டும்.

எனது இந்த 3 செய்திகளையும் நரேந்திரமோடி கவனத்துடன் கேட்டு ஏற்றுக்கொண்டார். அப்போது அவர், இவற்றை நடைமுறைப்படுத்த நல்ல நிர்வாகத்தை அமைத்து வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து வைப்பதாக கூறினார்.

அதே நேரம் நமது இந்திய நாட்டின் மக்களை மேம்பட்ட பிரஜைகளாக மாற்ற உறுதி ஏற்பதாக கூறினார். அதாவது வெறுமனே சம்பாதிப்பதும், அறிவு வளர்ச்சி பெறுவதுடன் மட்டுமல்லாது நமது நாட்டின் பாரம்பரிய வலிமையை உணர்ந்த மேம்பட்ட மக்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கூறினார்.

ஒருவரின் உள்ளத்தில் தோன்றும் இத்தகைய ஒளியானது, அவரது குணத்தின் அழகை உணர்த்தும். இத்தகைய நேர்மையான உறுதிப்பாடு ஒருவருக்கு, ஆன்மிக வலிமை பெற்ற தந்தையிடம் இருந்தும், தாயிடம் இருந்தும், வீட்டில் இருந்தும்தான் பெறப்படுகிறது. மேலும் தொடக்கப்பள்ளி ஆசிரியரின் அறிவூட்டல் மூலமும் பெறப்படுகிறது. நரேந்திர மோடி எல்லா வெற்றிகளையும் பெற நான் வாழ்த்துகிறேன் என அந்த செய்தியில் அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.