Home இந்தியா மோடி அலுவலக இணைய பக்கத்திற்கு 4 நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிமானோர் விருப்பம்!

மோடி அலுவலக இணைய பக்கத்திற்கு 4 நாட்களில் 10 லட்சத்துக்கும் அதிமானோர் விருப்பம்!

568
0
SHARE
Ad

modiபுதுடில்லி, ஜூன் 2 – நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப்பின் தொடங்கப்பட்ட இணையப் பக்கத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் அலுவலக இணையதளப் பக்கத்தில் 4 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘விருப்பம்’ (லைக்ஸ்) என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளனர்.

‘பிரதமர் அலுவலகம்’ இந்தியா என்ற பெயருடன் பிரதமர் நரேந்திரமோடி பணியில் ஈடுபட்டிருப்பது போன்ற புகைப்படத்துடன் ‘ஃபேஸ் புக்’ இணையத்தள முதல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் பிரதமரின் அன்றாட நிகழ்வுகள், தலைவர்களுடனான சந்திப்புகளின் புகைப்படங்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அதில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமர் மோடி சனிக்கிழமை அறிவுறுத்தியிருந்த செய்தியை வரவேற்று ஆயிரக்கணக்கானோர் ‘லைக்ஸ்’ (விருப்பம்) பதிவுகளையும், நூற்றுக்கணக்கான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளையும் ‘பேஸ் புக்’ இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

modi-websiteஅரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான பிரதமர் அலுவலக ‘பேஸ் புக்’ பக்கத்தில் 4 நாட்களில் ‘விருப்பம்’ என்ற பதிவு 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில் சுமார் 14 லட்சம் பேர் கணக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்ட மோடி அதன் மூலம் மக்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்று கருதுகிறார். மேலும் தனது அமைச்சரவையினரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று மோடி எதிர்பார்ப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடிதம் மூலம் அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.