கடந்த மே 6ஆம் தேதி பாங்கியிலுள்ள இஸ்மா தலைமைக் கட்டடத்தில் அவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று 1948 -ம் ஆண்டுக்கான தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 3 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க சட்ட விதி உள்ளது. குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய அப்துல் ஷேக்கிற்கு 5 ஆயிரம் வெள்ளி ஜாமின் கொடுக்கப்படுகிறது என்று நீதிபதி கூறினார்.
இந்நிலையில், இஸ்மாவின் தலைவராக இருக்கும் அப்துல்லா தாம் செய்யும் பணியின் மூலம் கிடைக்கும் நிதியுதவியில் வருமானம் பெற்று வருகிறார். அவரது மனைவி இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.