Home அவசியம் படிக்க வேண்டியவை நூருல் இசா விவாகரத்து வழக்கு – 2005 முதல் தம்பதிகளுக்கு இடையில் பிரச்சினை

நூருல் இசா விவாகரத்து வழக்கு – 2005 முதல் தம்பதிகளுக்கு இடையில் பிரச்சினை

446
0
SHARE
Ad

Nurul Izzah,கோலாலம்பூர், ஜூன் 27 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான, 34 வயதான நூருல் இசாவின் விவாகரத்து வழக்கு தற்போது கோலாலம்பூர் ஷரியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

தனது கணவர் ராஜா அஹமட் ஷாரிர் இஸ்கண்டார் ராஜா சலிமுடன் 2003ஆம் ஆண்டு திருமணம் புரிந்த நூருல் இசாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏழு வயதான பெண் குழந்தை ஒன்றும் 4 வயதான ஆண் குழந்தை ஒன்றும் அவருக்கு இருக்கின்றனர்.

இதற்கிடையில், நூருல் இசாவிற்கும் அவரது கணவருக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிமன்ற குழு இந்த விவாகரத்து வழக்கில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையின் படி, தம்பதியர் இருவருக்கும் இடையில், சமரசம் செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் இணைந்து வாழ வாய்ப்பில்லை என்பதால் விவகாரத்து வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தாலும் 2005 ஆம் ஆண்டு முதற்கொண்டே அவர்களுக்கு இல்லற பிரச்சினைகள் இருந்துவந்தன என்றும் அந்த நீதிமன்ற குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், நூருல்இசாவின் கணவர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துப்படி தம்பதிகள் இருவரும் சமரசம் செய்து கொண்டு இணைந்து வாழ இன்னும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து பிரச்சனையால் நூருல் இசா நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்து வந்தாலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டியில் முன்னணி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.