உடலில் பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்.
ஆட்டின் தலை: இதயம் சம்பந்தமான நோயை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தலைவலியை போக்கும். கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்.
ஆட்டின் மார்பக இறைச்சி: மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்பக புண்னை ஆற்றும்.
ஆட்டின் மூளை: கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.
ஆட்டின் கால்கள்: இடுப்புக்கு பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.