பெய்ஜிங், ஜூலை 22 – பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் வீசிய கடும் சூறாவளிக்கு இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த வாரம் சீனா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் வீசிய ரம்மாசன் சூறாவளிக் காற்று அந்த பகுதிகளில் மிகப்பெரும் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறாவளியில் சிக்கி தென்சீன கடற்பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. பல்வேறு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்த வட்டாரத்தில் சூறாவளி புயலை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. சூறாவளி புயல் தாக்கிய பகுதிகளில் தற்போது மீட்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.