சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனிநாடாக பிரகடனம் செய்து வருகின்றது. அதன் தலைவராக அல் பாக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.எ.ஏவுக்கு ஸ்னோடென் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அந்த இயக்கம் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் பாதுகாக்கப் படுவதற்குத்தான். இதன் பொருட்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலை கூட்டாகச் சேர்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை உருவாக்கியது” என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில் மொசூல் மற்றும் கிர்குக் நகரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இஸ்ரேல் தயாரிப்பு ஆயுதங்களை பயன்படுத்தியதாக குர்திஷ் இனப் படையினரும் தெரிவித்து இருந்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாடுகளின் சுயலாபத்திற்காக தீவிரவாத இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதும், அதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டு இருப்பதும் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.