Home வாழ் நலம் சோளப்பொரி (பாப்கான்) சாப்பிட்டால் ஆரோக்கியமா வாழலாம்!

சோளப்பொரி (பாப்கான்) சாப்பிட்டால் ஆரோக்கியமா வாழலாம்!

972
0
SHARE
Ad

popcornசிற்றுண்டி (ஸ்நாக்ஸ்) சாப்பிடும் பழக்கம் இருந்தால், சோளப்பொரி (பாப்கான்) வாங்கி சாப்பிடுங்கள். சோளப்பொரியில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஏனெனில் சோளப்பொரி மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. அதனால் அதன் சத்துக்கள் போய்விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு.

சோளப்பொரியில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த சோளப்பொரியில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.

#TamilSchoolmychoice

_popcornதானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும் சோளப்பொரியில், அதிகமான அளவு மற்ற பழங்கள், காய்களில் இருப்பதைப் போன்று  இதிலும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, இந்த சோளப்பொரியை சாப்பிடலாம்.

மேலும் சோளப்பொரியில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் கொழுப்புக்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.

Popcorn_Bowlஅதுமட்டுமல்லாமல், சோளப்பொரியில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும்.

Popcorn02அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும். நார்ச்சத்துக்கள் சோளப்பொரியில் அதிகம் இருப்பதால், உடலில் செரிமானம் விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும் சரிசெய்யும்.

மேலும் இதனை சாப்பிடுவதால், அடிக்கடி பசிக்காமல் இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.