இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி ஒன்றாக்கப்பட்டன. இந்த 2 நிறுவனங்கள் ஒன்றான நாளை கொண்டாட ஏர் இந்தியா தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.100-க்கு விமான பயணச் சீட்டை அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த 100 ரூபாய் பயணச் சீட்டை முன்பதிவு நேற்றில் இருந்து 5 நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சலுகை விலையிலான பயணச் சீட்டை பெற பொது மக்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்றனர். இப்படி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முந்தியடித்ததால் ஏர் இந்தியா நிறுவன இணையதளம் செயல் இழந்தது.