அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இலண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் 242 பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.
உயிர்ப்பலி எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அதிசய நிகழ்வாக, பயணிகளில் ஒருவர் உடைந்த விமானத்தில் இருந்து துணிச்சலுடன் வெளியே குதித்ததால் உயிர்தப்பி, விமான இடிபாடுகளில் இருந்து வெளியே வந்து நொண்டிக் கொண்டே நடந்து சென்ற காட்சியை இந்தியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதன் மூலம் பயணிகளில் ஒருவர் உயிர்தப்பியிருப்பது உறுதியாகியிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)