இதில் பேசிய கருணாநிதி, “ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றாக போராட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
கருணாநிதி தலைமையில் கடந்த மாதம் 26-ம் தேதி டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். இலங்கை அதிபர் மற்றும் அந்நாட்டு பிரதிநிதிகளை ஐ.நா சபையில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா விசாரணை குழு விசாரணையை தமிழ் நாட்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்களை வலியுறுத்தி ‘டெசோ’ அமைப்பு சார்பில் இன்று காலை சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
இதில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.