Home இந்தியா 9/11 தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி!

9/11 தாக்குதல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி!

478
0
SHARE
Ad

Narendra Modiநியூயார்க், செப்டம்பர் 29 – அமெரிக்காவில் செப்டம்பர் 9/11 நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.அல்கய்டா நடத்திய அத்தாக்குதலில் ஏராளமான இந்தியர்கள் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.

Modi 3

இந்நிலையில் அமைதியை குறிக்கும் விதமாக வெள்ளை நிற குர்தா, பைஜாமா உடையுடன் இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தார் மோடி.மஞ்சள் ரோஜாக்களை நினைவிடத்தில் வைத்த அவர், பின்னர் தனது கரங்களை குவித்து  நின்றபடி அஞ்சலி செலுத்தினார். இதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு இந்தியாவின் ஆதரவை அவர் புலப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

Modi 2

இதையடுத்து 9/11 தாக்குதலையொட்டி அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்கும் மோடி சென்றார்.அங்குள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் அத்தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்ட இழப்புகளை விவரிக்கக் கூடியவையாகும்.9/11 தாக்குதல் நினைவிடம் உலக வாணிப மையமும், இரட்டைக் கோபுரமும் முன்பிருந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.