காந்தி தங்கியிருந்த இல்லத்துக்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டத்தை தொடங்கினார் மோடி. பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.
‘தூய்மை இந்தியா’ திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 4,041 நகரங்களில் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.