இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
“இது வரை ஸ்கைப் செயலி பிரத்யேகமாக பதிவிறக்கம் செய்து கணினி உட்பட தொழில்நுட்பக் கருவிகளில் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இனி அதற்கான அவசியம் இல்லை. இணைய உலாவியே போதுமானது”
“தற்சமயம் இந்த புதிய முயற்சி சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகமான ஸ்கைப் உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத செயலியாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஸ்கைப்-ல் 2 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் காணொளி அழைப்புகளை ஏற்படுத்தவும், இணைய அழைப்புகளை ஏற்படுத்தவும் செலவழிக்கப்படுகிறது.