கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.00 மணியளவில்) – இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருக்கும் மத்திய செயலவை சட்டப்படி செல்லாது என்றும், அந்தக் கூட்டம் சங்கங்களின் பதிவதிகாரியின் உத்தரவை மீறும் வகையில் கூட்டப்படுகின்றது என்றும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் தற்போது மஇகா தலைமையகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மத்திய செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் அறிவித்திருப்பதால், அந்த மத்திய செயலவையைக் கொண்டு கூட்டப்படும் இன்றைய கூட்டம் சட்டப்படி செல்லாது எனக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் மஇகா தலைமையகத்தின் முன்பு திரண்டுள்ளனர்.
