குஜராத் மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக இந்த மாநாடு நடைபெறுகிறது. ‘எழுச்சி மிகு குஜராத்’ என்ற மாநாட்டை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடங்கி வைத்தார். மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகித்தார்.
நாளை மோடியை ஜான் கெர்ரி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகத் தொடர்பை முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்க உள்ளனர்.
அடுத்த 5 ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று காந்திநகரில் நடந்துவரும் 7-வது எழுச்சி மிகு குஜராத் மாநாட்டில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.