கடந்த நவம்பர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் வெளியிடபட்ட பிரசார காணொளியில், அவர்கள் சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கும் காட்சி இடம்பெற்று இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீவிரவாதிகள் சமீபத்தில் தங்களிடம் பிடிபட்ட ரஷ்ய உளவாளிகள் இரண்டு பேரை சிறுவன் ஒருவனைக் கொண்டு துப்பாக்கியால் சுட வைப்பது போன்று காணொளியை வெளியிட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட இரு பிணையக் கைதிகளும், ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. எனினும், ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட இந்த காணொளி, உலக நாடுகளை மிரட்டுவதற்காக போலியாக தயாரிக்கப்பட்டது என ஒருசாரார் கூறி வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த காணொளியை கீழே காண்க: