ஒபாமாவின் இந்திய வருகையின்போது, பிரதமர் நரேந்திரமோடி வித்தியாசமான உடைகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அசத்தினார். இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.
அவரை வரவேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் இருந்து இறங்கிய ஒபாமாவை மோடி கட்டித் தழுவியும், கை குலுக்கியும் வரவேற்றார்.
அப்போது பிரதமர் மோடி வெளிர் தங்க நிற ஆடை மற்றும் காவி நிறத்தில் மேல்துண்டு என அனைவரது பார்வையும் ஈர்த்தார். அவரது ஆடை ஒபாமாவையும் விடவில்லை.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிரதமர் மோடியின் ஆடையால் கவரப்பட்டார். பின்னர் மதியம் 12;50 மணி அளவில் அங்கிருந்து ‘பீஸ்ட்’ கார் மூலம் ஒபாமா அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு சென்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் அங்குள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். பிரதமர் மோடி அணிந்திருந்த கோட்டில், தங்க நிறத்தில் ‘நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’ என்று அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
பாரம்பரிய பந்த்கலா ரக உடையணிந்து வந்த மோடி, தலையில் ராஜஸ்தான் தர்பன் எனப்படும் தலைப்பாகை அணிந்திருந்தார். மோடியின் இந்த உடை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவிலும், தலைப்பாகையுடன் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.