கேமரன் மலையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல், பிரதமருடனான சந்திப்பின்போது மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் தம்முடன் இருப்பார் என்றார்.
“பிரதமருடனான சந்திப்பு மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெறும். டத்தோஸ்ரீ சுப்ரமணியமும் உடன் இருப்பார். இதுகுறித்து தற்போது மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது,” என்றார் பழனிவேல்.
மஇகா விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் முதல்நிலை தலைவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க இருப்பதாக நேற்று பிரதமர் நஜிப் கூறியிருந்தார். அது தொடர்பாக கருத்து கேட்டபோதே பழனிவேல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.