எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி சின்ஹூவா மேலும் தகவல் வெளியிடுகையில்,
“ராஜபக்சேவிற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார். ராஜபக்சேவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சே நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாரக் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதையும், சீன சின்ஹூவா செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.