இது சம்பந்தமாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மிதுன் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சாரதா நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததற்காகத் தான் ஊதியமாகப் பெற்ற 1 கோடியே 19 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், மோசடியில் தனக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று கொல்கத்தாவின் சால்ட்லேக் பகுதியில் உள்ள அம்லாக்கப் பிரிவு அலுவலகத்திற்குத் தனது வழக்கறிஞருடன் வந்து ரூபாய் 1 கோடியே 19 லட்சத்துக்கான காசோலையை அமலாக்கப் பிரிவு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
மேலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் நடித்த காட்சிகள், விளம்பரங்கள் தொடர்பான குறுந்தகடுகளையும் ஒப்படைத்தார்.
மிதுனின் இத்தகைய நடவடிக்கை அமலாக்கத் துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.