Home Featured நாடு வெளிநாட்டினர் வேண்டாம் என்றால் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் – சாஹிட் கருத்து

வெளிநாட்டினர் வேண்டாம் என்றால் அழுக்கான வேலைகளை செய்யுங்கள் – சாஹிட் கருத்து

702
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – வெளிநாட்டினர் வேண்டாம் என்று சொல்லும் மலேசிய இளைஞர்கள், அழுக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் என்று துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி சவால் விடுத்துள்ளார்.

நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் இளைஞர் சபையின் 32-வது ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய சாஹிட், “நான் இளைஞர்களுக்கு சவால் விடுகிறேன். என்னென்ன வேலைகளில் எல்லாம் வெளிநாட்டினர்கள் அமர்த்தப்பட்டுள்ளனரோ அதை செய்யுங்கள். நாம் அவர்களின் வேலைகளை ஏற்றுக் கொண்டு வெளியே தள்ளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நாட்டில் 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களைக் கொண்டு வர மலேசிய அரசாங்கம், வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.