Home இந்தியா 70 குழந்தைகள் மரணம்: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முதல்வர்!

70 குழந்தைகள் மரணம்: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முதல்வர்!

821
0
SHARE
Ad

Adityanathலக்னோ – உத்திரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் மரணமடைந்த சோகம் அம்மாநில மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாகக் கொண்டாட தனது மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதனை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

குழந்தைகள் மரணத்தால் மாநிலமே சோகத்தில் மூழ்கியிருக்க கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாட முதல்வர் ஏற்பாடுகளைச் செய்வது குறித்து ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்திருக்கிறது.