Home One Line P2 நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜி திகார் சிறையில் 10 நாட்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்!

நோபல் பரிசு: அபிஜித் பானர்ஜி திகார் சிறையில் 10 நாட்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தார்!

629
0
SHARE
Ad

புது டில்லி: நேற்று திங்களன்று பொருளாதார அறிவியல் பிரிவில், நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவராக இருந்தபோது, போராட்டத்தில் பங்கேற்றதற்காக டெல்லி திகார் சிறையில் 10 நாட்கள் கழித்ததாக 2016-ஆம் வெளியான ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1983-ஆம் ஆண்டு மாணவர் சங்கத் தலைவரை வெளியேற்றியதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் வீட்டின் முன்புறம் போராட்டமிட்டது தொடர்பாக அவர் காவல் துறையினரால் அடித்து கைது செய்யப்பட்டார்.

2016-ஆம் ஆண்டில் இந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அபிஜித் பானர்ஜி தன்னையும் அவரது நண்பர்களையும் 10 நாட்கள் திகார் சிறையில் அடைத்து வைத்ததாகவும், தாக்கப்பட்டதாகவும் பகிர்ந்திருந்தார்.

#TamilSchoolmychoice

நாங்கள் தாக்கப்பட்டோம் (நான் இருந்தேன்) திகார் சிறையில் தள்ளப்பட்டோம். தேசத்துரோக குற்றச்சாட்டு அல்ல. ஆனால், கொலை முயற்சி மற்றும் பிற குற்றச்சாட்டுகள்.  அக்குற்றச்சாட்டுகள் இறுதியில் தகர்க்கப்பட்டன.  ஆனால், நாங்கள் 10 நாட்கள் திகாரில் கழித்தோம்” என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலக வறுமை ஒழிப்பு தொடர்பான தனது பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அக்கட்டுரையில் கூறுகையில், காவல் துறையினரின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவும் இருந்ததாகக் கூறினார்.

மாணவர் அமைப்பின் தலைவர் ஆர்ப்பாட்டத்தை தூண்டியதற்காக வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இது சேர்க்கைக் கொள்கையை மாற்ற பயன்படுத்தப்படலாம், அதாவது கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவத்தை அளித்தது.

இது சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரத்தின் வரிகளை நிறுவுவதற்கான ஒரு முயற்சியாகும். நாங்கள்தான் முதலாளிகள், உங்கள் வாயை மூடிக்கொண்டு நடந்து கொள்ளுங்கள்என்று அபிஜித் பானர்ஜி 2016-ஆம் ஆண்டின் அக்கட்டுரையில் கூறியிருந்தார்.