Home One Line P1 மலேசியாவில் மின்னணு கண்காணிப்புகள் பாதுகாப்புக்கு உட்பட்டது!

மலேசியாவில் மின்னணு கண்காணிப்புகள் பாதுகாப்புக்கு உட்பட்டது!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் சட்ட அமலாக்க நிறுவனங்களின் மின்னணு கண்காணிப்பு சட்டபூர்வமானது என்றும், அது அதிகார அத்துமீறலைத் தடுக்க போதுமான பாதுகாப்பிற்கு உட்பட்டது என்றும் பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார்.

மின்னணு கண்காணிப்பு தொடர்பான மலேசிய சட்டம் அனைத்துலக தரத்திற்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும், சட்ட அமலாக்க நிறுவனங்கள் அவர்கள் விரும்பியபடி மின்னணு கண்காணிப்பைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

சட்டத்தில் மின்னணு கண்காணிப்புக்கு அளவுருக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கண்காணிப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க போதுமான பாதுகாப்பும் உள்ளது.”

#TamilSchoolmychoice

அரசு நிறுவனங்கள் முதலில் தங்கள் அறிக்கைகளை அரசாங்க வழக்கறிஞரிடம் முன்வைக்க வேண்டும். குற்றவியல் குற்றம் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஒரு கண்காணிப்பு தேவை என்று வழக்கறிஞர் நம்பினால், அவர் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள வேண்டும்என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நாட்டில் மின்னணு கண்காணிப்பு சட்டபூர்வமானதா என்ற கேள்விக்கு அவர் இந்த அறிக்கை வெளியிட்டிருந்தார்.

குற்றவியல் நடைமுறைக் குறியீட்டின் பிரிவு 116 சி உடன் மின்னணு கண்காணிப்பை ஒரு பொது ஏற்பாடாக அனுமதிக்கும் பல சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாக லியூ கூறினார்.